
வத்தலகுண்டுஅரசு கள்ளர் விடுதி இடத்தில் சமுதாய கூடம் முயற்சி செய்யும் பேரூராட்சி நிர்வாகத்தையும் வருவாய்த்துறை நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு பரபரப்பு நிலக்கோட்டை,ஜூன். 29- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டு அரசு கள்ளர் மாணவர் வெளியில் அமைந்திருக்கும் கள்ளர் கல்விக் கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் சமுதாயக்கூடம் கட்ட முயற்சிக்கு மத்தளக்குண்டு பேரூராட்சி நிர்வாகத்தையும் மற்றும் நிலக்கோட்டை வருவாய்த்துறை நிர்வாகத்தையும் கண்டித்து வத்தலக்குண்டு பிரமலைக்கள்ளர் வளர்ச்சி சங்கம் சார்பாக மாணவர்களுக்கான கண்டன ஆர்ப்பாட்டம் பிரமலைக்கள்ளர் வளர்ச்சி சங்கத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

சங்கச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே. சி. திருமாறன்ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:- தென் தமிழகத்தில் 1920 ஆம் ஆண்டு ஏற்பட்ட மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா பெருங்காமநல்லூரில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்யப்பட்ட மாயக்காள் என்ற பெண் உள்பட 17 பேரை துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்தது மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயங்களுடன் பாதிக்கப்பட்டனர்.
இதை அறிந்த ஏகாதிபத்திய பிரிட்டேர் அரசாங்கம் பிரமலைக்கள்ள இன மக்களுக்காக உருவாக்கியது கள்ளர் சீரமைப்பு துறை. அந்தத் துறைக்கு தேவையான நிலம் சொத்து நிதி அனைத்தும் வழங்கியது எங்கள் பாட்டன், முப்பாட்டன், எங்களது முன்னோர்கள் அதில் உருவான பள்ளிகள் தான் கள்ளர் பள்ளிகள். அப்படிப்பட்ட இடம் எங்கள் முன்னோர்களால் கள்ளர் கல்விக் கழகத்தின் பெயரில் வாங்கப்பட்ட சொத்து அந்த இடத்தில் வத்தலக்குண்டு பேரூராட்சியும் நிலக்கோட்டை வருவாய்த் துறை நிர்வாகமும் கையகப்படுத்தி அரசு சமுதாயக்கூடம் கட்டினால் விடுதியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பல்வேறு வகையில் பாதிக்கப்படும்.

இந்த முயற்சியை உடனடியாக அரசு அதிகாரிகள் கைவிடவில்லை என்றால் வத்தலகுண்டில் மிக விரைவில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி வி கதிரவன் சிறப்புரையாற்றினார். மாயாண்டி குடும்பத்தார் இயக்குனரும் நாயகனுமான தருண் கோபி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தில் வத்தலகுண்டு கள்ளர் விடுதி இடத்தில் சமுதாயக்கூடம் கட்டாதே கட்டாதே தூண்டாதே தூண்டாதே வன்முறையை அரசை தூண்டாதே அத்துமீறி அரசு அதிகாரிகள் செயல்பட்டால் உயிரை மாய்க்க தயங்க மாட்டோம் தயங்க மாட்டோம் எங்கள் சொத்து எங்கள் சொத்து வத்தலக்குண்டு பகுதியில் பதட்டத்தை தூண்டாதே தூண்டதே என்று வாசகங்களை கோஷங்களாக எழுப்பினார்கள். சங்க பொருளாளர் பாண்டியன், அரசு கள்ளர் மாணவர் விடுதி உறுப்பினர் பாலு தேவர், சங்க வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் குமார், கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழு தலைவர் அன்பு கிறிஸ்டியான், நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம், மாநில பொருளாளர் இளங்கோ, அனைத்து கள்ளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், டி.என்.டி கட்சி நிறுவனத் தலைவர் அன்பழகன், இந்திய மக்கள் பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் நேதாஜி, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் போஸ், உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட பிரமலைக்கள்ளர் இன மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.