
புதுச்சேரி தூய்மை பாரத விழிப்புணர்வு நிகழ்ச்சி ஓடும் ரயிலில் ஓவிய போட்டி சபாநாயகர் பங்கேற்பு.
புதுச்சேரி ஜூன் 23
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திட்டமான தூய்மை பாரதம் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தூய்மை இந்தியா தலைப்பில் நடைபெற்ற ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி நிகழ்ச்சியை சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம்.ஆர் அவர்கள் நேற்று 22.6.25 காலை தொடங்கி வைத்தார்.

புதுவை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலில் ஓவிய போட்டி நடைபெற்றது.
இந்த ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி நிகழ்ச்சியை சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம்.ஆர் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.ராமலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த ஓவியப் போட்டியில் 6 பள்ளிகளைச் சேர்ந்த 350-ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஓடும் ரயிலில் ஓவியம் வரைந்தனர். இதில் பாரத பிரதமர் அவர்களின் தூய்மை இந்தியா திட்டத்தின் தலைப்பில் விழிப்புணர்வு ஓவியங்களை மாணவ மாணவிகள் வரைந்தனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை புதுவை திருவள்ளுவர் கலைக்கூடத்தின் துணைத் தலைவர் கோவிந்தராஜன் செயலாளரும் ஓவிய ஆசிரியருமான சிவக்குமார் மற்றும் ஜெய ஹரி அலமேலு பெஞ்சமின் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.