
புதுச்சேரி தானம்பாளையம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்
புதுச்சேரி ஜூன் 23
மணவெளி சட்டமன்ற தொகுதி தானாம்பாளையம் மூகாம்பிகை நகர் மற்றும் மருது சுந்தராம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.35 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
தானாம்பாளையம் பகுதியில் உள்ள மூகாம்பிகை நகர் மற்றும் மருது சுந்தராம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் வடிகால் வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக மூகாம்பிகை நகரில் கழிவுநீர் வாய்க்கால் வசதியை ஏற்படுத்தித் தந்தார்.
அதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மூகாம்பிகை நகர் மற்றும் மருது சுந்தராம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்கு அரசாணை பெற்று தந்தார்.
இதன்படி பணிகளை துவங்கும் முகமாக பணிகளுக்கான பூமி பூஜை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று 23.06.2025 காலை மூகாம்பிகை நகர் மற்றும் மருது சுந்தராம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு ரமேஷ் உதவி பொறியாளர் திரு நாகராஜ் இளநிலை பொறியாளர் திரு அகிலன் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜா ஞானசேகர் சக்திவேல் திருமால் கோகுலகிருஷ்ணன் பழனி மற்றும் பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.