June 8, 2025
புதுச்சேரி உப்பளம் பகுதியில் நானா (எ) C.M.அஷிரப் பூங்கா பராமரிப்பு பணி நடைபெற்றது.

புதுச்சேரி உப்பளம் பகுதியில் நானா (எ) C.M.அஷிரப் பூங்கா பராமரிப்பு பணி நடைபெற்றது.

புதுச்சேரி மே-28

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட காஜியார் வீதி, முல்லா வீதி, மீலாத் வீதி சந்திப்பில் அமைந்துள்ள நானா (எ) C.M.அஷிரப் பூங்கா நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருப்பதை குறிப்பிட்டு பொது மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இதனால் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தார்.
அதன் விளைவாக, தற்போது அந்த பூங்காவில் நீர் ஊற்று மற்றும் அழகு செடிகள் சேர்க்கப்பட்டு, மின் விளக்குகள் சீர் செய்து முறையாக பராமரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் துவக்கி வைத்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து அவர், “நீர் ஊற்று
பூங்கா மீண்டும் மக்களுக்கு மனம் நிம்மதி அளிக்கும் இடமாக மலர்ந்திடும் வகையில் அனைத்துத் தேவையான வசதிகளும் செய்யப்பட்டு பராமரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தொகுதி அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை செயலாளர் ராஜி, நிசார் மற்றும் கிளை செயலாளர் ராகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.