
விடுதலை..
பாதையில் நடந்தால் பாதைசாரி
பள்ளியில் படித்தால் மாணவராம்
வருந்தி உழைத்தால் உழைப்பாளி
வாழ எழுந்தால் குடும்பமவர்
தேடிப் போனால் நாடோடி
திரண்டிட செல்வம் பணக்காரர்
ஒட்டி வாழ்ந்தால் ஊர்க்காரர்
ஒப்பவர் ஆக உறவுக்காரர்
வண்டியில் ஏற பயணிகளாம்
வரிசையில் நின்றால் முன் பின்னே
பொருளை விற்றால் கடைக்காரர்
பொழுதை போக்க சுகக்காரர்
ஆடி முடிக்க நாட்டியராம்
அதட்டி திருத்த வாத்தியாரே
முற்றும் துறந்தார் முனிவர்களாம்
முகத்தை மறைப்பார் கோழைகளாம்
வாரிக் கொடுக்க வள்ளல்களே
வாஞ்சையில் பேச நண்பர்களாம்..
உற்று நோக்க உளவாளி
உயரமாய் நிமிர அதிகாரி
வம்பை நீக்க எதிர்கேள்வி
வந்து பேச வழக்குரைஞர்
மண்ணை உழுவார் உழவர்களே!.
மனதைத் தொடுவார் அறிஞர்களே!
நோயைக் கொல்வார் மருத்துவரே..
நோன்பில் இருப்பார் பக்தர்களே!
ஆடைகள் நெய்வார் நெசவாளர்
அடிக்கும் சம்மட்டி உறுதியாளர்
பூணும் அணிகலன் நகைக்கடையாளர்
பூவை தொடுப்பார் பூக்காரர்
விருந்துகள் படைக்க சமையலரே
வேடிக்கை காட்ட கூத்தாடி..
என என பலபேர் இருக்கையிலே
இப்போ தேர்தல் என்றால் வாக்காளர்!.
என எல்லாம் பேசும் வக்கனைகள்
இப்போ இங்கே மட்டும் பிரிவினையாய்
சாதிகள் எனவே பிரித்து வைத்து
சண்டித்தனமாய் தானே முன்நின்று?!
மக்களை பிரித்து பின் நிறுத்தி
மண்ணையும் பிரித்து களர் நிலமாய்
தாங்கள் சிலரே உண்பிடமாய்
தகர்த்தார் தானே கொல்லிடமாய்..
தேர்தல் அது ஒரு வகுப்பறையே..
தேரார் பலருக்கு குடியிருப்பாய்
ஆகார் ஆனார் அங் கிருப்பாய்..
அங்கே பிள்ளைகள் பெற்றெடுப்பாய்?!
கேளாய் மக்களே கேள்விகளாய்
கிளை விடும் மரத்திற்கு அது தடையாம்
விடுவாய் அதனை அகற் றிடுவாய்
விடுதலை தவறுக்கு தண்டனையாய்!
மக்கள் ஆட்சி மக்களிடம்
மண்ணை ஆளட்டும் பொது நிலையாய்
வந்தார் வந்தே நிலைபதற்கே
வடிக் கட்டட்டும் இது முடிவுரையாய்!
-பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.