
அணைப்பட்டியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு 60 லட்சம் மதிப்பில் சாலை பணி துவக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சி.
நிலக்கோட்டை,மே.29 – திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் அமைந்துள்ள சொக்குப் பிள்ளை பட்டி பிரிவிலிருந்து அணைப்பட்டி வைகை ஆறு மேம்பாலம் வரை சாலை 7 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியமாக காட்சியளித்து வந்தது.

இந்தச் சாலையால் தினந்தோறும் அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்வதற்காக பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு கஷ்டங்களை தினம் தோறும் பக்தர்களும், பொதுமக்களும், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள், பள்ளி மாணவ, மாணவிகளும் சந்தித்து வந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பலதரப்பட்ட கட்சியினர் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து முதலமைச்சருக்கு கையெழுத்து இயக்க போராட்டம், மனு அனுப்பும் போராட்டம், வேறு வழி இன்றி சாலை மறியல் போராட்டம் கடந்த ஒரு 10 முறை இந்த சாலையை சீரமைக்க சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்திலிருந்து 60 லட்சத்து 50,000 மதிப்பில் சாலை அமைக்கும் பணி நேற்று நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதி தலைமையில் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவு, தியாகு, பிள்ளையார் நத்தம் ஊராட்சி மன்ற ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி, திமுக தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை மற்றும் பலர் இந்த துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதை அறிந்த இப்பகுதி பொதுமக்கள் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமான சாலை தற்போது துவங்க பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.