
தேனி மாவட்டம் போடியில் அருள்மிகு பரமசிவன் மலை கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடியில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தென்திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அருள்மிகு பரமசிவன் மலை கோவில் மகா கும்பாபிஷேக விழா தலைவர் ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன் அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தியாவின் புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு நன்னீரால் கலச கும்பங்கள் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திமுக போடி நகர மாணவரணி அமைப்பாளர் முத்துப்பாண்டி அவர்கள் தலைமையில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.