April 16, 2025
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணிகள் தீவிரம். மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் பக்தர்கள்

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணிகள் தீவிரம். மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் பக்தர்கள்

தென்காசி, மார்ச் 28.
தென்காசி மாவட்டத்தின் காசி விஸ்வநாதர் கோவில், வட இந்தியாவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலைப் போல கட்டியமைக்க 15ஆம் நூற்றாண்டில் மாமன்னர் பராக்கிரம பாண்டியர் தொடங்கினார். சிற்றாறு கரையில் எழுந்துள்ள இந்த கோவில், முதலில் 11 அடுக்குகளுடன் கட்டப்பட்டதாகும். ஆனால், காலப்போக்கில் இயற்கை சீற்றத்தினால் கோபுரம் பெரிதும் சேதமடைந்தது.

இதனைப் பார்த்த பக்தர்களும் பொதுமக்களும் கோபுரம் மற்றும் கோவிலை மறுசீரமைக்க கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, தினத்தந்தி அதியர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் கோபுரம் 187 அடி உயரமுடன், 9 அடுக்குகளாக புதுப்பிக்கப்பட்டது. இதன் பின் 1990 மற்றும் 2006 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போதைய திருப்பணிகள் & மகா கும்பாபிஷேகம்.

வழக்கமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் உடனடியாக திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.

தமிழக அரசு, தமிழகம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் திருப்பணிகள் செய்யும் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த பணிகளுக்காக மொத்தமாக ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மக்கள் விழிப்புணர்வு & அதிகாரிகள் ஆய்வு:

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த், கோவிலுக்கு நேரில் விஜயம் செய்து திருப்பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிட்டனர். கோவில் செயல் அலுவலர் பொன்னி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியவர்கள்.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன்

தென்காசி நகர மன்றத் தலைவர் ஆர்.சாதிர்

அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், முரு புவிதா, ஷீலாகுமார், மூக்கன் மற்றும் கோவில் அலுவலர்க

பக்தர்களும் பொதுமக்களும் இந்த திருப்பணிகள் விரைவாக முடிந்து, மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்த திருப்பணிகள் மூலம் கோவிலின் பழமை மற்றும் தொன்மை மீண்டும் சிறப்புபெறுமென மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.