June 8, 2025
இந்திய வரலாற்றில் வரி கொடா இயக்கத்தை தொடங்கிய நாளை வரலாற்று நினைவு ஆனையூர் கிராமத்தை பழங்கால பொக்கிஷங்கள் மீண்டும் சீரமைக்கவும், தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தமிழக முதல்வருக்கு கோரிக்கை

இந்திய வரலாற்றில் வரி கொடா இயக்கத்தை தொடங்கிய நாளை வரலாற்று நினைவு ஆனையூர் கிராமத்தை பழங்கால பொக்கிஷங்கள் மீண்டும் சீரமைக்கவும், தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தமிழக முதல்வருக்கு கோரிக்கை

தொல்காப்பிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய முன்வர வேண்டும் வரலாறு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் உருக்கம்.
……………………………………..
தென்னிந்திய வரலாற்றில் ஆங்கில அரசை எதிர்த்து வரி கொடுக்க மாட்டோம் என்று வரிகொடா என்ற இயக்கத்தை 23.03.1754 பிரிட்ஜ் இந்தியாவில் வெள்ளையர்களை எதிர்த்து பிற மலை நாட்டில் முதல் வரி கொடா இயக்கம் தோற்றுவித்து முதல் சுதந்திரப் போராட்ட போராளி மாமன்னன் நெல்கட்டும்செவலை ஆண்ட தமிழ் பாளையக்காரர் ஆவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.

இவருக்கு புலித்தேவனுக்கு ஓலை அனுப்பிய கள்ளர்களின் வீர வரலாற்ற உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக அந்த நாளை நினைவு கூறிய சமுதாயப் பெரியோர்களுக்கும் தலைவர்களுக்கும், கள்ளர் நாடு அறக்கட்டளை நிர்வாகிகளும் கொண்டாடிய மக்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, கட்டக்கருப்பன்பட்டி ஊராட்சியில் ஆனையூர் அமைந்துள்ளது.

காட்டு யானையாகப் பிறந்த இந்திரனின் ஐராவதம், கடம்பவனமாகிய திருக்குறுமுல்லூர் வந்து, ஸ்ரீஅக்னீஸ்வர முடையாரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாகவும், அதன் காரணமாக வெள்ளை யானையாகிய ஐராவதம் வழிபட்டதால் இங்குள்ள ஈசன், ஸ்ரீஐராவதீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது.

1754 இல் ஆங்கிலேயர்களை எதிர்த்த போராட்ட போர்க்களங்கள் ஆனையூர் நாட்டை முக்கியமாகக் கொண்டு சிவகங்கை கள்ளர் நாட்டு தலைவர்கள், நெல்லை நாயக்க, மறவர் தலைவர்கள், இராமநாத மறவர் தலைவர்கள், திண்டுக்கல் நாயக்கர் தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கெதிராக திட்டம் தீட்டி,செயல்பட்ட இடம் தான் ஆனையூர் (கருமாத்தூர்) கள்ளர் நாடு. இந்த தென்னிந்திய புரட்சியை மேற்கோள் காட்டும் ஆங்கில வரலாற்று ஆய்வாளர்கள் “கள்ளர் பழங்குடிகளை ஆங்கிலேயரின் பரம்பரை எதிரிகள் என்றும் கள்ளர்களின் சுயாட்சி கொள்கையாலும்,வீரியத்துடன் மார்பை காட்டி எதிர்த்து நிற்கும் குணத்தாலும், இடைவிடாத தாக்குதல் பண்பாலும் கள்ளர் பழங்குடிகளை கண்முடித்தனமாக ஆங்கிலேய தளபதிகள் கொலை செய்துள்ளனர் என குறிக்கின்றனர்.

இதனால் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஆனையூர் கள்ளர்களையும், சிவகங்கை சீமை கள்ளர்களையும், மற்றும் பல்வேறு போராட்டக்காரர்களையும் கூளப்ப நாயக்கரையோ, கள்ளர் படைகளையோ பிடிக்கவோ, அழிக்கவோ முடியவில்லை. இறுதிவரை ஆனையூர் நாட்டுக்குள் புகுந்து ஆங்கிலேயர்களால் தாக்குதல் நடத்தி கூளப்ப நாயக்கரை பிடிக்கமுடியவில்லை.

தென்னிந்திய புரட்சியில் மிகவும் வீரியத்துடன் சண்டையிட்ட கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் பின்னாங் தீவிற்கு நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டிற்காக போர் புரிந்த வீரர்கள் அன்னிய தேசத்தில் அடக்கமாயினர்.

ஆங்கிலேயர்கள் முதலில் ஆனையூர் நாட்டு பிறமலைக்கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கின்றனர்.ஒட்டு மொத்த பிரிட்டீஸ் படைகள் சேர்ந்தும் ஆனையூர் கள்ளர் படையை ஒன்றும் செய்ய முடியவில்லை.அனைத்து கள்ளர்களுக்கும் குற்றப்பரம்பரை சட்டம் போட்டு பிற்காலத்தில் பல கள்ளர்களுக்கு விலக்கு அளித்தாலும், இந்த ஆனையூர் கள்ளர்களுக்கு மட்டும் எங்களால் விலக்கு கொடுக்க முடியாதென்று மறுத்துவிட்டது ஆங்கிலேய அரசு. அதற்கு காரணம் இவர்கள் மட்டுமே இறுதிவரை ஆங்கிலேய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தனர். இந்த வரலாற்றில் 23.03.1754 நாளன்று ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மாட்டோம் வரி கொடா என்ற இயக்கத்தை துவங்கிய கிராமம் ஆனையூர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுதந்திரத்தின் முதல் போர் வரிகொடா இயக்கம் தொடங்கிய நாளை கொண்டாடும் விதமாக கள்ளர் நாடு அறக்கட்டளை நினைவுபடுத்தி 23-03-1754 ஆம் ஆண்டு முதல் வரிகொடா இயக்கத்தை ஆரம்பித்த ஆனையூர் நாட்டு தியாகிகளின் வீரத்தை போற்றி கடந்த 23.03.2025 அன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

.கள்ளர்நாடு அறக்கட்டளை சோழ மற்றும் பாண்டிய நாட்டுக்கள்ளர் அமைப்பின் மூலமாக விழா நடைபெற்றது. இவ்விழாவில் தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் நிறுவனத் தலைவர் திருமாறன்ஜீ, முக்குலத்தோர் எழுச்சி கழகம் தலைவர் கவிக்குமார், தமிழக மண்ணுரிமைக் கட்சி தலைவி சாயின் பாத்திமா தேசிய தலைவர் திரைப்பட இயக்குனர் சௌத்ரி தேவர்,
கள்ளர் நாடு அறக்கட்டளை தலைவர் வல்லாளத்தேவன் மற்றும் கள்ளர்நாடு தன்னார்வலர்கள், வீரமங்கை மாயக்காள் பாசறை, தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக், முக்குலத்தோர் எழுச்சி கழகம், தமிழக மண்ணுரிமை கட்சி, நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு பொருளாளர் இளங்கோ, மற்றும் ஆனையூர் கிராம மக்களும், அரசியல் அமைப்புக்கள் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள். முக்கிய நிகழ்வாக ஆனையூர் நாட்டின் வரலாற்றை அரசுக்கு தெரியபடுத்தி இம்மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி வேலைவாய்ப்புக்கு முன்னுரிமையும் வரலாற்றை நிகழ்வை எடுத்துரைத்து ஆவணப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் ஜீ விழாவில் பேசியதாவது:- ஆனையூர் கிராமத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பல போர்க்களம் கண்டவர்கள். இங்கு வாழ்ந்த பிரமலைக்கள்ளர் இன மக்கள் வரி கொடுக்க மாட்டோம் என்று நிலைப்பாட்டில் உறுதியாகவும், அதற்காக 23. 3.1754 ஆங்கிலேயருக்கு வரி கொடுக்கக் கூடாது என இந்திய நாட்டின் முதல் சுதந்திரப் போர் மாவீரன் மாமன்னன் புலி தேவனுக்கு ஆங்கிலேயர்களுக்கு வரி கொடா என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி ஓலை மூலமாக கடிதம் எழுதிய வரலாறு கூறுகிறது. இந்த மண்ணை அள்ளி உடல் முழுக்க பூசிக் கொள்ளும் அளவுக்கு வீரம் விளைந்த இடம்தான் ஆனையூர். இப்படி வரலாற்று சிறப்புமிக்க உசிலம்பட்டி தாலுகா ஆனையூர் வரலாறு தமிழக பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கக் கூடிய பாடங்களில் இடம்பெற வேண்டுமென்றும் அதற்கு உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பேசினார்.

தேசியத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் செளத்ரி தேவர் விழாவில் பேசியபோது :- தற்போது தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறை திரைப்படம் தயாரித்து வருகிற ஜூன் மாதத்திற்குள் வெளியிட முழுமூச்சான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திற்கான விதை விதைக்கப்பட்ட இடம் ஆனையூர் போர் அந்தப் போரையும் ஆனையூர் போராட்டங்கள் குறித்த விரிவான ஆவணப்படம் எடுப்பேன் என்று வாக்குறுதி மக்கள் மத்தியில் அளித்தார்.

நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மகளிர் அணி மாநில நிர்வாகி நிலவை வசந்தி கூறியதாவது:- உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் 1754 ஆம் ஆண்டுகளில் நடந்த போர்களில் கள்ளர் இனத்தைச் சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட போர்வீரர்கள் போரில் மாண்டு இருக்கிறார்கள். நிலக்கோட்டை ஜமீன் கூளப்ப நாயக்கருக்கும் அக்காலத்தில் நடந்த போர்க்களத்தில் ஆனையூர் பிரமலைக்கள்ளர்கள் உதவியாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றுச் சின்னங்கள் எல்லாம் மிகவும் சிதிலமடைந்து, கிணறுகள் எல்லாம் பாதுகாப்பற்று பழுதடைந்த நிலையில் இருக்கிறது இதனை உடனடியாக அரசு புனரமைப்பு செய்து வரலாற்றுச் சின்னங்கள் நினைவுபடுத்துவதற்காக ஒரு மிகப்பெரிய தொல்லியல் துறை ஆய்வாளர்களும் இதனை ஆய்வு செய்து வரலாற்றை மாணவ மாணவிகள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கள்ளர் நாடு அறக்கட்டளை நிறுவனர் ராஜேஷ் வல்லாளத்தேவன் கூறியதாவது:- ஓலையின் மூலமாக சுதந்திர வரலாற்றில் தமிழர் நிலத்தில் முதல்வரிகொடாஇயக்கம் (23-3-1754) நடத்தி மாமன்னன் பூலித்தேவனுக்கு ஓலை அனுப்பிய கள்ளர்களின் வீர வரலாற்ற உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக அந்த நாளை நினைவு கூறிய சமுதாயப் பெரியோர்களுக்கும் தலைவர்களுக்கும் கள்ளர் நாடு தன்னார்வலர்கள் சார்பாக கோயில்கள் , கிணறுகள், மற்றும் பல்வேறு காலகட்டங்களில் இங்கிருந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்று விட்டதால் இந்தப் பகுதியை தொல்லியல் துறை உரிய ஆய்வு செய்து சரியான வரலாற்றை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.