
புத்தக திருவிழா விழிப்புணரவு பேரணி நடைபெற்றது.
தேனி மாவட்டம் பி.சி.பட்டியில் நடைபெறும் மூன்றாவது புத்தக திருவிழா முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்கரை பெரியகுளம் நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணியினை பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதாசிவக்குமார் தொடங்கி வைத்தார். நகரின்முக்கிய வீதி வழியாக பேரணி நடைபெற்று நூலகம் வந்தடைந்தது. இப்பேரணியில் நூலக ஆர்வலர் அன்புக்கரசன் வழக்கறிஞர் மணிகார்திக்,விஜயகுமார் (நகர்நல சங்கத் தலைவர்), பொறியாளர் ராமநாதன்,கேப்பிட்டல் கிளப் மாறன் நூலகர்கள் சவடமுத்து, குமரன்,காளீஸ்வரி, பாக்கியலட்சுமி, செல்வகணேசன், செந்திலரசி மற்றும் டிரயம்ப்பள்ளி, ரங்க கிருஷ்ணா பள்ளிமாணவர்கள் வாசகர்கள் கலந்துகொண்டனர் நல்நூலகர் விசுவாசம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.