
தெ.கள்ளிப்பட்டியில் திரவியம் கல்லூரி மாணவிகளின் சுற்றுப்புற தூய்மை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள திரவியம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சார்பில் நேற்று முன்தினம் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிலையில் தெ.கள்ளிப்பட்டி பகுதியில் கல்லூரி மாணவிகள் சமூக சேவை மற்றும் சுற்றுப்புற தூய்மையில் ஈடுபட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.






