
ராம் & கோ நிறுவனத்திற்கு நிலுவை தொகை வழங்காத நகராட்சி நிர்வாகம்: மேலாளர் குமுறல்
பெரியகுளம்: மார்ச்: 11
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ராம் & கோ தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மூலம் நகராட்சி பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 2025 முதல் ராம் & கோ நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை விலக்கி கொண்டு சங்கர் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் நகர் பகுதியில் தூய்மை பணி மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான காலகட்டத்திற்கு உரிய சுமார் 80 லட்சம் ரூபாய் வரையிலான பில் நிலுவை தொகையை பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் ராம் & கோ நிறுவனத்திற்கு செலுத்த மறுத்து வருகின்றது. ராம் & கோ நிறுவனத்தின் மூலம் பலமுறை பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தை பல முறை வலியுறுத்தியும் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்ற தலைவர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ராம் & கோ தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கக்கூடிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என ராம் & கோ நிறுவன மேலாளர் உமர் கோரிக்கை விடுத்துள்ளார்.