
அடையாளம் தெரியாத வாகனம் மோதி 10 காட்டுப் பன்றிகளின் குட்டிகள் உட்பட 12 பன்றிகள் பலி: வனத்துறையினர் விபத்தில் பலியான பன்றிகளை கை கைபற்றி விபத்து குறித்து விசாரணை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டி பகுதியில் தேனி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இரவில் கூட்டமாக சாலையை கடந்த காட்டுப்பன்றிகள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.
இந்த விபத்தில் பத்து குட்டி பன்றிகள் உட்பட 12 காட்டுப்பன்றிகள் வாகன மோதியதில் உடல் சிதறி பலியானது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த காட்டுப்பன்றிகள் பலியான விபத்து குறித்து பெரியகுளம் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் பலியான காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.