June 7, 2025
குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்று நோய்க்கு எதிரான எச்.பிவி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்று நோய்க்கு எதிரான எச்.பிவி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

ரோட்டரி குயின் சிட்டி 2024 ஜூன் மாதம் முதல் கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் ஹெச்பி தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் உள்ளடக்கிய செர்விக்யூர் எனும் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு வந்திருக்கிறது. மேலும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை உடன் இணைந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் 2025 ஜனவரி மாதம் வரை 200 குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கி இருக்கின்றது.

திண்டுக்கல், மார்ச் 2 2025, மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் கருப்பை கருப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) தடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவும், திண்டுக்கல் குயின்சிட்டி ரோட்டரி கிளப், டெல்லி தெற்கு ரோட்டரி சங்கம், டெல்லி சவுத் எண்ட் ரோட்டரி சங்கம். டெல்லி தென்கிழக்கு ரோட்டரி சங்கம். மற்றும் ஃபரிதாபாத் NIT ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மெகா இலவச HPV தடுப்பூசி முகாமை நடத்தியுள்ளது.

இந்த விழாவில், 1,000 இளம் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக HPV தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முகாம் மார்ச் 2, 2025, தாடிக்கொம்பு சாலையில் உள்ள காமராஜர் வித்யாலயாவில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சரவணன் IAS,மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் Rtn ராஜா கோவிந்தசாமி மருத்துவக்கல்லூரி தலைவர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு முதல் கட்டத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் ரோட்டரி மாவட்டம் 3011 இணைந்து செயல்படுத்திய இந்த முகாமிற்கு மையப்புள்ளியாக இருந்த ரோட்டரி மாவட்ட 3000 ஆளுநர் Rtn ராஜா கோவிந்தசாமி ரோட்டரி மாவட்ட 3011 ஆளுநர் Rtn மகேஷ் திரிகா ரோட்டரி மாவட்டம் 3011த்தின் மாவட்ட கர்பப்பை வாய்ப் புற்றுநோய் அழிப்பு திட்டத்தின் தலைவர் Rtn வந்தனா பல்லே (டெல்லி தெற்கு ரோட்டரி சங்கம்) ஆகியோரை அனைவரும் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்.

ஸ்காட் பூனாவாலா (Scott Poonawala) நிறுவனம் இந்த ஹெச்பிவி தடுப்பூசிகளை இலவசமாக வழங்க நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது

செர்வி கியூர் திட்டத்தின் சேர்மன் டாக்டர் பாலசுந்தரி, துணை சேர்மன் Rtn வினிதா முரளிதரன் செயலர் சித்ரா ஜெயன், துணை செயலர் Rtn மல்லிகா, பொருளாளர் Rs நளினா மற்றும் குயின் சிட்டி சங்க உறுப்பினர்களும் ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn பவன்ஜி பட்டேல் துணை ஆளுநர்கள் Rm சித்ரா ரமேஷ் Rtn செல்வகனி மற்றும் பல்வேறு ரோட்டரி அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இளம் சிறுமிகளை HPV வைரஸில் இருந்து பாதுகாக்க ஆரம்பத்திலேயே தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை இந்நிகழ்வு வலியுறுத்தியது. இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் முன்வந்து பெண்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு முக்கியப் பங்களிக்குமாறு ரோட்டரி குயின் சிட்டி சங்க தலைவர் Rtn கவிதா செந்தில்குமார் செயலர் Rtn பார்க்கவி சந்தோஷ் கேட்டுக்கொண்டனர்.

இரண்டாம் கட்டத் தடுப்பூசி 2025 செப்டம்பர் நடக்க இருப்பதாகவும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.