June 8, 2025
இவள் தாரகை இலக்கிய இதழ் சார்பாக முப்பெரும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.

இவள் தாரகை இலக்கிய இதழ் சார்பாக முப்பெரும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது.

திண்டுக்கல் பிச்சாண்டி மீட்டிங் ஹால் பின்புறம் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் இவள் தாரகை இலக்கிய இதழ் பதிப்பகம் நடத்திய முப்பெரும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஜிடிஎன் கலைக் கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது சமூக செயற்பாட்டாளர் சுசிலா மேரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் பேரின்பம் மருத்துவமனை மருத்துவர் அமலாதேவி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் ஜி டி என் கலைக்கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முத்துலட்சுமி இவள் தாரகை 21 வது இதழ் புத்தகத்தை வெளியிட ஸ்ரீ அமோகம் மருத்துவமனை மருத்துவர் செல்வராணி இவள் தாரகை 21 வது இதழ் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இவள் தாரகை விருத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன குறிப்பாக கலைமதி அச்சாணி, புவிதாரகை, ஈகைச்சுடர் ஊடகத் தென்றல், சமூக ஆர்வலர், அறச்செம்மல், ஒளிர் நிலா இவை போன்ற விருதுகள் வழங்கப்பட்டன டெய்சி மற்றும் திலகவதி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது முதன்மை தகவல் ஒருங்கிணைப்பாளர் பசுமை வானொலி தொகுப்பாளர் காதர் பாஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இறுதியாக இவள் தாரகை பெண்கள் இதழ் ஆசிரியர் பரிமளா தேவி நன்றியுரை நிகழ்த்தி முப்பெரும் விழாவை  நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.