
பெரியகுளத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அரங்கம் திறப்பு விழா- பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள நூற்றாண்டு நூலகம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கட்டிட வளாகத்தின் இரண்டாவது 6 லட்சம் வாசகர்கள் நன்கொடை மூலம் மாடியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்,போட்டி தேர்வர்கள் பயன்பெறும் வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது .
அதனை பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் திறந்து வைத்து விழா பேருரை ஆற்றினார். இந்த நிகழ்வில் வடகரை நூலக வாசகர் வட்ட தலைவர் பெரும் புரவலர் மணி கார்த்திக் வரவேற்புரையாற்றினார் . தென்கரை நூலக வாசகர் வட்ட தலைவர் , சமூக ஆர்வலர், நூலக ஆர்வலர் புரவலர் அன்புக்கரசன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணகுமார், தமிழ் செம்மல் இராசரத்தினம் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர் பத்மினிபாலா, செந்தில்குமார் மாவட்ட பிரதிநிதி, முகமது இலியாஸ் நகர் செயலாளர், நாகராஜன் தலைவர் தென்கரைபேரூராட்சி, நடேசன் வடுகபட்டி தலைவர்,பொறியாளர் திருப்பதி,நித்யானந்தம், சகிலாபேகம் மாநில நூலகர்கள் கூட்டமைப்பு செயலாளர், பால்ராஜ் ,நூலகர்கள்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் தென்கரை நூற்றாண்டு நூலக நல்நூலகர் சவடமுத்து நன்றியுரை ஆற்றினார் . தென்கரை பேரூராட்சி திமுக கவுன்சிலர் மு.தேவராஜ் , நல் நூலகர் விசுவாசம் , மற்றும் புரவலர்கள் ,வாசகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் .
தற்பொழுது நூலகத்தில் படித்து அரசு போட்டித்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் அருணா,பவித்ரா,சத்தீஸ்வரி,பாத்திமா பாராட்டபட்டனர்.கவிப்பேரரசு வைரமுத்து மேலும் கணினி,படிப்பு வசதி செய்துகொள்ள ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார்.