
கால்வாய், நீர் தேங்கும் சாலை: மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுப்பாரா?
மதுரை மாநகராட்சி அண்ணாநகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயில் தெருவில், கடந்த பல மாதங்களாக சாலை மிக மோசமாக தேங்கிய நிலையில் உள்ளது.
இந்த பாதை வழியாக தான், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, பாதசாரிகள் நடந்து செல்லக்கூட, லயக்கற்ற நிலையில் உள்ளது.

இது குறித்து மதுரை வடக்கு தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான, மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, வார்டு கவுன்சிலர் பொன் வளவன், மாநகாட்சி பொறியாளர்கள் கவனத்துக்கு கொண்டும் சென்றும் கூட, இந்த மோசமான சாலையை சீரமைக்க ஆர்வம் காட்டவில்லை
யென, தெரிகிறது.
இதேபோல நீர் செல்லும் வாய்க்கால், மதுரை மாநகராட்சி நிர்வாகம், கவனக்
குறைவால், குப்பைகள் கால்வாய்கள் மாறிவிடுகிறது. மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாய், குப்பைகள் நிறைந்த கால்வாய்கள் இருப்பதுடன், கொடுத் தொல்லைகள் பெருகி வருகிறதாம்.
மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், மதுரை மாநகராட்சி பழுதான சாலைகள், கழிவு நீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் முத்துராமன்
கேட்டுக் கொண்டுள்ளார்.