
தமிழகத்தில் கட்சி நடத்தும் அரசியல்வாதிகளை பிரசாத் கிஷோர் மீது வைத்த நம்பிக்கை! தமிழக மக்களுக்கு துரோகமா? பிரசாத் கிஷோர் அரசியல் விவேகம்! தமிழக மக்களை ஏமாற்றுகிறார்! வாக்காளர்கள் ஏமாளிகளா? தமிழக வாக்காளர்களை சிந்தியுங்கள்.
இந்தியா முழுவதும் பிரதமர் மோடியாக வரப்போகிறார் என்று விளம்பரம் செய்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாத் கிஷோர் செய்த விளம்பரங்கள் தான் இந்திய நாட்டின் பிரதமராக மோடி வந்தார் என்று ஒரு புரளி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோன்றுதான் தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழக முதல்வராக வலம் வந்து கொண்டிருப்பதற்கு காரணம் பிரசாத் கிஷோரின் அரசியல் நான் காரணம் என்று பரவலாக இன்றுவரை ஒரு புள்ளி விவரங்கள் பரவி உண்மையாகவோ பொய்யாகவோ இருக்கலாம்.
இந்த இந்த புரளியை நம்பி தற்போது தமிழகத்தில் உருவான கட்சி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தின் கொண்டு வந்து விடுவோம் என்று தினந்தோறும் சூளுரை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட தருணத்தில் கடந்த 15 ஆண்டு கால தேர்தல் வரலாற்றைப் பார்த்தால் தமிழக மக்கள் 200க்கும் 100க்கும் 500க்கும் ஓட்டு போட்டார்கள் என்பது ஒரு வகையில் உண்மையாக கூட இருக்கலாம்.ஆனால் உலகிலேயே கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய ஒரு மிகப்பெரிய பழமையான மொழி அப்படி என்றால் அது தமிழ் மொழி தான்.
அந்தத் தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்களான தமிழர்கள் சற்று சிந்திக்க வேண்டும் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒரு பிரசாத்துக்கு சோறு உன்னை ஆளக்கூடிய ஒரு முதலமைச்சர் தேர்வு செய்வதற்கான ஒரு சூளுரையை உருவாக்குகிறான் என்றால் நீ அறிவில்லாமல் போய் விட்டாயா?. இல்லை உன்னுடைய அறிவை பிரசாந்த் கிஷோர் ஏமாற்றிவிட்டாரா? இல்லை ஆங்கிலத்தில் சொல்லுமாறு பிரைன் வாஸ் செய்து விட்டாரா அவர் செய்த பிரைன் வாஸ் என்ன தமிழக வாக்காளர்கள் சற்று சிந்திக்க மாட்டீர்களா? தமிழக வரலாறு நீங்கள் தேடிப் போனால் கிடைக்காத ஒரு பொக்கிஷம். நம் முன்னோர்கள் அப்படி உருவாக்கி வைத்த ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு தமிழக அரசியல். ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஐயா காமராஜர், அரசியலை எல்லாம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எவ்வளவு அற்புதமான திட்டங்களை உலகிற்கு பூமிநாத இயக்கத்தை தோற்றுவித்த வினோ பாவாஜினுடைய முன்மொழிவை ஏற்று தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தன்னுடைய நிலங்களை இலவசமாக கொடுத்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள் உண்மையா? இல்லையா? அந்த வகையில் தமிழகம் முழுவதும் அணைகளைக் கட்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் ஐயா காமராஜர். யாராக இருப்பினும்ஒரு சில தவிர்க்க முடியாத குற்றங்கள் தான் செய்யும்.அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதுபோன்றுதான் இன்றைக்கு தமிழகம் பல கோடி கணக்கான ரூபாய்க் கடன் வாங்கிக் கொண்டு மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம் என்று சொல்லக்கூடிய ஆளும் கட்சியினர் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆக இருந்து கொண்டு தன்னுடைய சொந்த பந்தங்கள் தன்னுடைய உறவினர்கள் தன்னுடைய நிலவளங்கள் மட்டும் வருடம் தோறும் அதிகரிக்கிறது கடன் சுமை குறைகிறது கடனே இல்லை பல கோடி சொத்துக்கு அதிபர் ஆகிறார்கள் என்பது தமிழகத்தினுடைய வரலாறு கடந்த ஒரு 50 ஆண்டுகளாக திகழ்கிறது.
அப்படி முதலமைச்சராக இருக்கக்கூடிய முதலமைச்சரின் வங்கிக் கணக்குகள் இரு முதலமைச்சர் உடைய உறவு வகையிலும் சொத்துக்கள் கூடுவது வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது சாலச் சிறந்த உண்மை. ஆனால் மக்கள் மீது திணிக்கக்கூடிய கடன் சுமையை பார்த்தால் ஆண்டுதோறும் அதிகமாகக் கொண்டே போகின்றது. அப்ப முதலமைச்சர் தன்னுடைய சொத்துக்கள் மதிப்பு கூடுகிறது.
முதலமைச்சர் ஆளக்கூடிய மாநிலத்தின் மீது கடன் சுமை கொடுக்கிறது என்றால் எந்த வகையில் அது நியாயம். ஆகையால் இதை பற்றி பொதுமக்களாகிய வாக்காளர்களாகிய நீங்கள் உங்களிடமே உங்களுடைய சிந்தனைக்காக இந்த சூழ்நிலையை இன்றைய நிதர்சன உண்மையை உங்கள் மத்தியில் பதிவு செய்கிறோம். ஆகையால் வரும் காலங்களில் இருக்கின்ற தேர்தல்களில் பிரசாத் கிஷோர் தமிழக அரசியலை நிலை நாட்டக்கூடிய தமிழக முதல்வரை ஒருவரை தேர்ந்தெடுப்பார் என்று முடிவு செய்துவிட்டால் தமிழக மக்கள்களை நீங்கள் முட்டாளா? பணத்திற்காக ஓட்டு போட்டீர்கள் என்றால் நீங்கள் முட்டாள் தான் என்று பிரசாந்து கிஷோர் உங்களை பறைசாற்றுவார் தமிழர்களை ஒன்று திரண்டு வருகிற 2026 இல் யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எப்படி வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதை உங்கள் மத்தியில் கேள்விக்கணையாக கொடுத்துவிட்டு கட்டுறையை முடிக்கிறோம்.