June 8, 2025
விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக வளர்ந்து இருக்கிறது. சிந்தனை செல்வம் எம்.எல்.ஏ. பேச்சு

விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக வளர்ந்து இருக்கிறது. சிந்தனை செல்வம் எம்.எல்.ஏ. பேச்சு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றதை விளக்கி கூறும் பொதுக் கூட்டம் தாதம்பட்டி மந்தையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் பொறியாளர்
தமிழ் நிலவன், தலைமை தாங்கினார்.

மாவட்டச் செயலாளர் ஊர் சேரி சிந்தனை வளவன், மண்டலச் செயலாளர் மாலின், மாவட்ட அமைப்பாளர் விடுதலை வீரன், தொகுதி துணை செயலாளர் ராமச்சந்திரன் ,
தொகுதி துணை அமைப்பாளர் வளவன், பாலன், யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் அரசு விஜயார் வரவேற்றார். இந்த கூட்டத்தில், சட்டமன்ற குழுத் தலைவர் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ.
,முதன்மை செயலாளர் பாவரசு, வெங்கடேசன் எம் எல்.ஏ., தி.மு.க பேரூர் செயலாளர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர்செயலாளர் பிரகாஷ்,சி.பி.எம். மாவட்ட செயலாளர் மதிவாணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சீதாராமன், முத்துகிருஷ்ணன், அதிவீரபாண்டியன், தமிழாளன், ராமசாமி,செளந்தர் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் வழங்கி மாநில கட்சியாக தேர்தல் கமிஷன் அங்கீகார கொடுத்தை தெரிவிக்கும் அங்கீகார பெவிழா வாடிப்பட்டியில் நடக்கிறது.

வாடிவாசல் என்று சொன்னால் நுழைகிற வாசல் என்று பொருள் வாடிப்பட்டி என்று சொன்னால் நுழைகிற இடம் என்று பொருள் மதுரை மண்ணுக்குள் அதிகாரம் நுழைகிற களமாக சோழவந்தான் களம் இருக்கும் என்பதை குறிப்பால் உணர்த்துகிற வகையில் விடுதலை சிறுத்தைகளின் அங்கீகார பெருவிழா. தெற்கு இருந்து வீசும் காற்றுக்கு தென்றல் என்று சொல்வார்கள்.

தெற்கே மதுரை மண்ணிலிருந்து தொடங்கிய விடுதலை சிறுத்தைகள் என்கிற வெப்ப காற்று தமிழ்நாட்டை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறது என்று 30 ஆண்டுகளுக்கு முன்னாலே விடுதலை சிறுத்தைகளின் வருகையை மேடைகளில் நாங்கள் பதிவு செய்வோம் புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற அடையாளத்தை அண்ணல் அம்பேத்கர் பாபா ஷாகிப் என்கிற அடையாளத்தோடு மாத்திரமே சொல்லி பழகிய சமூக சூழ்நிலையில் ஆயுதம் தாங்கிய போராளிகளை அத்தகைய போராளி படையை வழி நடத்தியவர்களை மாத்திரமே புரட்சியாளர் என்று சொல்ல முடியுமா இடதுசாரி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் இந்தியாவிலேயே எதிர்க்கப்பட வேண்டியது சாதிதான் அதை எதிர்த்த ஒரே தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் தான் ஆகவே அவர்தான் புரட்சியாளர் என்று எனக்கு அடையாளம் காட்டிய தலைவர் இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல இளிச்சவாய கூட்டமும் அல்ல சீறிப்பாயும் சிறுத்தைகள் நாங்கள் முழக்கத்தோடு மதுரை மண்ணிலே நடந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த களங்களின் விளைவாய் இன்று தமிழக அரசியலில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கிறது.

இன்று ஆளுங்கட்சி ஆண்ட கட்சி ஆளப்போகிற கட்சி புதிய கட்சிகள் அனைத்தும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கக்கூடிய ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். கடந்த காலங்களில் 9 பேர் மட்டுமே வெளிநாடு சென்று படித்து வந்த நிலையில் ஒவ்வொரு தலித்து மாணவரும் 36 லட்சம் செலவில் மொத்தம் 171 பேர் வெளிநாடு சென்று படிக்கிறார்கள். அதற்கு காரணம் எக்சேஞ்ச் மெத்தட் என்ற சுருக்கு கயிறை கழட்டி விட்டது நான்தான ஒவ்வொரு வருடமும் வன்கொடுமையால் இறந்தவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது சட்டம் ஆனால் அதிமுக காலத்தில் 64 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 403 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் ரூ3600 . தற்போது முதல் கட்டமாக 5000 வழங்கி 15 ஆயிரம் வரை உயர்த்த உள்ளார்கள் . நூறாண்டுகளுக்கு பிறகு அம்பேத்கர் என்ற சொல்லை பயன்படுத்தும் முடியவில்லை . பாராளுமன்றத்தில் சொல்ல சனாதன இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கடந்த கூட்டத்தொடரில் கூட அம்பேத்கர் அம்பேத்கர் என்று கூறுவதை விட பகவான் பகவான் என்று கூறலாமே புண்ணியம் கிடைக்கும் என்று அமித்ஷா வருத்தப்பட்டு கூறியுள்ளார் . சனாதனத்தை வேறறுப்போம் சமூக நீதியை நிலைநாட்டுவோம் நம்முடைய போராட்டம் நம்முடைய சமுதாயத்திற்கு மட்டுமல்ல அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் சேர்த்துதான் என்பதை உணர வைப்போம். இவ்வாறு அவர் பேசினார். முடிவில், ஒன்றிய துணைச் செயலாளர் ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.