
பழனியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த நான்கு பேரை பிடித்து விசாரணை செய்ததில் பால் கேன் மற்றும் கார் டியூப்பில் மறைத்து வைத்து இருந்த 3 1/4 ,கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலிசார் 4 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சில நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பழனி கொடைக்கானல் ரோடு வண்ணாம்பாறை மீன்பண்ணை அருகே ஆடுகள் மேய்த்து வரும் மணோகரனிடம் விசாரணை மேற்கொண்டதில் கார் டியூப்பில் வைத்தும் பால் கேனில் கஞ்சா இருந்ததை கண்டு பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பழனி அடிவாரத்தை சேர்ந்த மணிகண்டன் 32, பழனி பாளையத்தை சேர்ந்த கருணாகரன் 47, நெய்காரபட்டியை சேர்ந்த முத்து 40, ஆகிய நான்கு பேரும் கூட்டாக சேர்ந்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 3, 1/4, கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி ஆயக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.