
திண்டுக்கல் மாவட்டம் பழனியில்... தேனீர் விலை இமயமலை உயரம் அளவு விலை ஏற்றம்... நுகர்வோர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி...பல கேள்விகள் எழுகின்றன ?...
இந்த விலை நிர்ணயம் செய்வது யார் ?…
அரசு உத்தரவா ?…
நுகர்வோர் உணவு பொருட்கள் விற்பனை சங்கமா?…
பால் விற்பனையாளர்கள் சங்கமா?…
இல்லை…
டீ கடை முதலாளிகளின் சுய முடிவா…? என்கிற கேள்வி எழுந்ததுள்ளது.
தற்போது 1/4 லிட்டர் ( 250 மில்லி ) பாலின் விலை – 13 ரூபாய்
50 மில்லி பால் கலந்த 1/2 கிளாஸ் டீ – 15 ரூபாய் என்ன கொடுமை சார் இது…
பாலை விட டீ விலை உயர்ந்த வரலாறு…
1/4 லிட்டர் பால் விலை – 8 ரூபாய்
2015 – 2016 வரை ( 100 மில்லி பால் )முழு கிளாஸ் டீ – 8 ரூபாய் என இருந்தது.
1/4 லிட்டர் பால் விலை – 9 ரூபாய்
2017 – 2018 வரை ( 100 மில்லி பால் ) முழு கிளாஸ் டீ – 8 ரூபாய் என இருந்தது.
1/4 லிட்டர்( 250 மில்லி ) பால் விலை – 10 ரூபாய்
2019 – 2020 வரை ( 100 மில்லி பால் )முழு கிளாஸ் டீ – 10 ரூபாய் என இருந்தது.
1/4 லிட்டர் பால் விலை – 11 ரூபாய்
2021 – 2022 வரை (75 மில்லி பால் ) 3/4 கிளாஸ் டீ – 10 ரூபாய் என இருந்தது.
1/4 லிட்டர் பால் விலை -12 ரூபாய்
2022 – 2023 வரை (50 மில்லி பால் ) 1/2 கிளாஸ் டீ – 12 ரூபாய் என இருந்தது.
1/4 லிட்டர் பால் விலை – 13 ரூபாய்
2023 – 2024 வரை( 50 மில்லி பால்) 1/2 கிளாஸ் டீ -12 ரூபாய் என உள்ளது.
1/4 லிட்டர் பால் விலை – 13 ரூபாய் 2024 – 2025 ( 50 மில்லி பால் ) 1/2 கிளாஸ் டீ – 15 ரூபாய் என…தற்போது வருகின்ற 01 / 01 / 2025 முதல் டீ விலை – 15 ரூபாய் உயருதாம்…
இதுவரை பாலின் விலை லிட்டருக்கு 1 ரூபாய் என படிப்படியாக உயர்ந்து வருகிறது.
ஆனால்… டீ யின் விலை 100 மில்லி அதாவது… முழு கிளாஸ் டீ ல் இருந்து….
50 மில்லி அதாவது 1/2 கிளாஸ் டீ ஆக மாறியதே தவிர… அளவு அதிகரிக்கவில்லை…
பால் விலை லிட்டருக்கு 1 ரூபாய் தொகை அதிகமானால்…
டீ கடைக்காரர்கள் மில்லிக்கு தொகை அதிகரித்து கொள்கிறார்கள்.
பணத் தொகை அதிகரித்தது தான் உச்சம்….
பாலில் மில்லியில் அளவு குறைந்து வருவதுதான் நுகர்வோருக்கு மிச்சம்…
காலாகாலமாக பாமர மக்கள்,கூலி தொழிலாளிகள் பருகும் டவரா செட்டில் டீ தருவதை தவிர்ப்பார்கள்… இனி தர வேண்டும்.
இதில் பாதிக்கப்படுவது நுகர்வோர்கள் தான்… லாபம் சம்பாதிப்பது கடை முதலாளிகள் தான்…
ஒரு டீ க்கு பின்னால் வரும் மறைமுக வருமானங்கள்… பாலில் பாதிக்கு பாதி வருமானம்.
பாலாடை நெய் மூலம் வருமானம்.
பலகாரம் மற்றும் இதர பொருட்கள் மற்றும் திண்பண்டம் வருமானம்.
டீ கடை வைத்திருக்கும் ஒரு ஏழை முதலாளிகளை பார்க்க முடியுமா ?…
முதலாளி நுகர்வோரான நாம் இல்லையெனில்… தேனீர் கடையுமில்லை.. கடை முதலாளியும் இல்லை…
நமது உரிமை…நமது கடமை…100 மில்லி பாலில் முழு கிளாஸ் மற்றும் டவரா செட்டில் டீ – 10 ரூபாய்க்கு தாருங்கள் என கேட்டு வாங்கி குடியுங்கள்…
அப்படி தர மறுத்தால்…. நமக்கு நாமே முதலாளிகள்…
அந்த டீ கடை இல்லை யென்றால் என்ன!… நாமே சுகாதாரமான பால் -13 ரூபாயில் …(250 மில்லி)1/4 லிட்டர் வாங்கி… நாமே வீட்டில் குடும்பத்துடன் 6 நபர்கள் ஆரோக்கிய தேனீர் குடிக்கலாம்.
நுகர்வோர், பொதுமக்களிடம் மில்லி கணக்கில் சுரண்டல் நடை பெறுவதால்…இனி யாரும் தேனீர் கடையை தேடி வரமாட்டோம் என உறுதி ஏற்றால் எல்லாம் தானாக வழிக்கு வந்து தீரும்…
தேனீர் விலை இமயமலை உயரம் அளவு விலை ஏற்றம்… நுகர்வோர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி…பல கேள்விகள் எழுகின்றன…
இந்த விலை நிர்ணயம் செய்வது யார் ?…
அரசு உத்தரவா ?…
நுகர்வோர் உணவு பொருட்கள் விற்பனை சங்கமா?…
பால் விற்பனையாளர்கள் சங்கமா?…
இல்லை…
டீ கடை முதலாளிகளின் சுய முடிவா…? என்கிற கேள்வி எழுந்ததுள்ளது.
தற்போது 1/4 லிட்டர் ( 250 மில்லி ) பாலின் விலை – 13 ரூபாய்
50 மில்லி பால் கலந்த 1/2 கிளாஸ் டீ – 15 ரூபாய் என்ன கொடுமை சார் இது…நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு துறை சார்ந்த அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சுய விலையேற்றத்தை நிறுத்த வேண்டும்.(100 மில்லி பால் ) முழு கிளாஸ் டீ யின் விலை – 10 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நுகர்வோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு :
விலை வாசிகள் அனைத்தும் குறைந்தும் இப்படி 1/4 லிட்டர் பால் விலை – 13 ரூபாய் தான்… ஆனால் (50 மில்லி பால் ) 1/2 கிளாஸ் டீ யின் விலை – 15 ரூபாய் என்பது அநியாயம் தான்… இதனை நீங்கள் தான் கேட்க வேண்டும்…
ஒரு 1/2 கிளாஸ்(50 மில்லி பால்) டீ யின் அடக்க விலை விபரம்…
பல லிட்டர் பால் விற்பனை ஆகும் டீ கடைக்காரர்கள் தாங்கள் கடையில் பால் வாங்கி இடை கட்டி விற்பனை செய்யும் மொத்த லிட்டர் பாலுடன் …. கீழ் கண்ட.விபர விலையுடன் விபரமாக தனித்தனியாக… ஒரு டீ விலையை ஒப்பிட்டு பாருங்கள்…கூட்டி கழிச்சு பாருங்க.. கணக்கு சரியாயில்ல…1 ரூபாய் அதிகமாஇருக்குங்குக….
50 மில்லி பால் விலை – 2.60 பைசா, சர்க்கரை – 55 பைசா,டீ தூள் – 55 பைசா, சிலிண்டர்-1.10 பைசா,சம்பளம்-1 ரூபாய், மின்சாரம் – 1.10 பைசா , தண்ணீர் உட்பட சர்வீஸ் சார்ஜ்- 1.10, முதலாளி – 1 ரூபாய் என கணக்கு பார்த்தல் மொத்தம் = 9 ரூபாய் தான் அடக்கம்… இருந்தாலும் நுகர்வோர் 1 ரூபாய் அதிகமாக=10 ரூபாய் கொடுத்து தேனீர் வாங்குகிறோம்…முதலாளி நுகர்வோரான நாங்கள் வந்தால் தான்… அனைத்து கடைக்காரர்களும் நிரந்தர முதலாளிகள்…