
ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அருள்மிகு பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு மகளிர் கலைக் கல்லூரி புதிய கட்டிடப் பணியை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அருள்மிகு பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் அரசுமகளிர் கலைக்கல்லூரி புதிய கட்டிடப்பணியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வளங்கள்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து உணவுத்துறை அமைச்சர் கூறியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிபொறுப்பேற்ற பின்பு சுமார் ரூ -44 ஆயிரம் கோடி பள்ளிக்கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது எனவும் புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்த காரணத்தால் பெண்கள் உயர் கல்விகற்பதில் 34% உயர்ந்திருக்கிறார்கள் என்பது பெருமை அளிக்கிறது எனவும் மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 1-முதல் 5-வரை உள்ள அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் எளிய முறையில் ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சியை அளிக்கப்பட்டு வருகிறது இனிவரும் ஆண்டில் 1-முதல் 8-ம் வகுப்பு வரையிலும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் அதையடுத்து கல்லூரிக்கு வரும் கல்லூரி மாணவிகள் காலையில் உணவு உண்ணாமல் வருவதால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத ஒரு நிலைப்பாடு இருந்து வந்த நிலையில் தமிழக முதல்வர் கல்லூரி மாணவர்களுக்கு தகப்பன் ஸ்தானத்தில் நின்று காலைஉணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டமும் செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது வரும் கல்விஆண்டில் கிராமங்களில் இருந்து கல்லூரிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் இலவச பேருந்துகள் இயக்கப்படும் என்பதால் இனி கல்லூரி மாணவர்கள் கவலைப்படவேண்டாம் என்றும் அதுமட்டுமின்றி இந்த கல்வி ஆண்டு முதல் கலைஞர் நூற்றாண்டு பயிற்சி தேர்வு மையத்தில் படிக்கக் கூடிய மாணவர்கள் உயர்கல்வியான ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ. ஆர்.எஸ், போன்ற தேர்வுகளை எழுதும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கக்கூடிய மிகச்சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும் எனவே மாணவர்கள்
கல்விகற்பதில் தாயும் தந்தையுமாக இருந்து ஆட்சி செய்தவரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நான் மனதார பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ந்து பேசினார் இந்நிகழ்ச்சியில் பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து,துணை ஆணையர் வெங்கடேஷ்,வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், பழனி கோட்டாட்சியர் சக்திவேல், பழனிஅருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் அன்னபூரணி, ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திருமலைச்சாமி,துணைத் தலைவர் வெள்ளைச்சாமி,
நகராட்சி ஆணையாளர் ஸ்வேதா,பொறியாளர் சுப்ரமணிய பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வடிவேல் முருகன், வட்டாட்சியர் பழனிச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் அதிகாரிகள் கல்லூரி மாணவியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.