
பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கிளை தலைவர் இப்ராகிம் பாட்ஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட பொருளாளர் கருப்பண்ணன், நகர பொருளாளர் முருகன், அழகர்சாமிபுரம் கிளை செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர் சையது சுல்தான், ஆண்டவர் , ஆகியோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினர். ந தேனி மாவட்ட செயலாளர் மோகன் விளக்க உரையாற்றினார்.
புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து. பெரியகுளம் நகர அமைப்பாளராக முத்துவேல் பாண்டியராஜன் (எ) கண்ணன், அழகர்சாமி புரம் கிளைக் கழக துணைத் தலைவராக சிவராஜ் (எ)போஸ். துணைச் செயலாளராக துரைப்பாண்டி, அமைப்பாளராக பெருமாள் ஆகியோர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்னர்.
பகுத்தறிவாளர் கழகம், நம்மால் முடியும் நல சேவை சங்கம் இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்துதல், கீழ வடகரை ஊராட்சி பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனைத்து பகுதிகளிலும்.
முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தருதல், கழிவு நீர் அகற்றுதல், குப்பைகளை அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு செய்து தர கீழ வடகரை ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தல், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் பகுத்தறிவாளர் கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல்.
போதைப் பொருள் ஒழிப்பில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கருத்தரங்கம் நடத்துதல் என பல்வேறு என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கீழ வடகரை கிராம அலுவலர் நாகராஜன்,கட்டிடக் கலைஞர் வீராசாமி, சிவா, அந்தோணி , உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை கழக பொருளாளரும், வழக்கறிஞருமான காமராஜர் நன்றியுரை ஆற்றினார்.