June 9, 2025
விராலிப்பட்டி பகுதியில் திடீரென உருவான ஜெப க்கூடத்தை அகற்றக்கோரி நிலக்கோட்டை தாசில்தாரிடம் இந்து முன்னணி மனு

விராலிப்பட்டி பகுதியில் திடீரென உருவான ஜெப க்கூடத்தை அகற்றக்கோரி நிலக்கோட்டை தாசில்தாரிடம் இந்து முன்னணி மனு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்த துணைத் தாசில்தார் ஜெயக்குமாரிடம் இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் இந்து முன்னணியினர் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள விராலிப்பட்டி ஊராட்சியில் வீட்டு மனை மனை இடங்களாக வாங்கி அதில் வீடு கட்டி விட்டு திடீரென்று ஒருவர் ஜெப கூட நடத்தி வருகிறார்.

இந்தப் பகுதியில் அதிக பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அரசு அனுமதி இல்லாமல் ஜெபக்கூடம் கட்டுவது சரியான முகாந்திரம் இல்லை. எனவே உடனடியாக ஜெபக்கூடத்தை அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட நிலக்கோட்டை துணை தாசில்தார் ஜெயக்குமார் உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அங்கிருந்து இந்து முன்னணி கிளம்பிச் சென்றனர்.

அப்போது பாஜக நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் லட்சுமணன், ஒன்றிய செயலாளர் விக்னேஷ், இந்து முன்னணி நிர்வாகிகள் சங்கிலி, ரமேஷ், தங்கபாண்டியன், மாவட்ட ஊடகம் பிரிவு செயலாளர் மோடி ஆனந்த், வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிவா, பா.ஜ.க. வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜ்குமார் உட்பட பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.