
மாநகராட்சியின் அலட்சியத்தால் நோய் தொற்று பரவும் அபாயம்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை காரணம் காட்டி 4 நாட்களாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றாமலும், வீடு வீடாக சென்று குப்பைகளை சரிவர எடுக்காமலும் அலட்சியம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம்.
சாலை ஓரங்களிலும் தனிநபர் இடங்களிலும் குப்பையை கொட்டி வைப்பதால் துர்நாற்றம் வீசுவது உடன் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சிக்கு வரி செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரச்சாரம் செய்து பொதுமக்களை அச்சுறுத்தி வசூல் செய்து வரும் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற தனி வசூல் என மாநகராட்சிக்கு உட்பட்ட பொது மக்களிடம் வசூல் செய்துவிட்டு குப்பைகளை அகற்றாமல் நோய் தொற்றை பரப்பி வருகிறது.

எனவே அனைத்து இடங்களிலும் நான்கு நாட்களாக அகற்றப்படாமல் ஆங்காங்கே விட்டு வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.