June 9, 2025
அரசு கள்ளர் சீரமைப்பு துறையில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிடுக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

அரசு கள்ளர் சீரமைப்பு துறையில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிடுக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த உடனடியாக ஆசிரியர்களை நியமித்திட தீர்மானம்.

நிலக்கோட்டை பிப். 14-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மாவட்டக்கிளையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் த. முருகன் தலைமையில் வத்தலகுண்டில் நடைபெற்றது. வட்டார செயலாளர் தென்றல் அரசி வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தீனன் கூட்டத்தில் பேசியதாவது:-
கள்ளர் சீரமைப்பு துறையில் 2015 இல் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெற்றது. அதற்கு பின்னாள் இடைநிலை ஆசிரியர் நியமனமே நடைபெற வில்லை. தற்போது சுமார் 100 இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடம் உள்ளது.இதனால் ஆரம்பப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பாதிப்படைகிறது.

இக்கா லிப் பணியிடங்களை டி.இ.டி. தேர்வு மூலமோ அல்லது பள்ளிக்கல்வி துறையில் இருந்து கள்ளர் சீரமைப்பு துறையில் பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள 34 இடைநிலை ஆசிரியர்கள் மூலமோ நிரப்பிட தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது என தெரிவித்தார்.

கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் வேணி நன்றி கூறினார்
கூட்டத்தில் 50 க்கும் மேலான, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.