
பழனி அருகே தாமரைக் குளம் ஊராட்சியில் கனகாம்பாள் கோயில் திருவிழா.
பழனி அருகே தாமரைக் குளம் ஊராட்சியில் கனகாம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் விமரிசையாக திருவிழா நடைபெறும்.
ஒரு வார காலம் நடைபெறும் விழாவில் அணிகலன்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.
பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.