
கொங்கர் குளத்தில் தைப்பூசத்தை அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர் பத்து பரவசம்
நிலக்கோட்டை, பிப்.12-திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கொங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஆதி ருத்ர லிங்கேஸ்வரர் – மீனாட்சி அம்மாள் திருக்கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள், அலகு குத்து பால்குடம் எடுத்து சாவடி எடுத்து அரோகரா எனக்கோசருக்கு பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
கொங்கர்குளம், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் , முருக பக்தர்கள், சிவனடியார்கள் செய்திருந்தனர்.