
மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் எடுக்கும் விழா நடைபெற்றது.
அலங்காநல்லூர்:
மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வலையபட்டி கிராமத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் திருவிழா கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது தற்போது, திருவிழாவிற்கான பிடி மண் கொடுக்கும் நிகழ்ச்சி வலையபட்டி ஜமீன்தார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல் .ஏ.
கலந்து கொண்டார். இதை காண்பதற்காக 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முகூர்தகால் ஊன்றும் பணி நடைபெறும் என, வலையபட்டி அரசம்பட்டி | லக்கம்பட்டி சல்லி கோடங்கிபட்டி.வ.புதுார்ஆகிய ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.