
திண்டுக்கல் மாநகராட்சியின் குத்தகை இடங்கள் சூறையாடப்படுகிறது.
திராவிட மாடல் திமுக ஆட்சியில் திண்டுக்கல் மாநகராட்சியின் குத்தகை இடங்கள் சூறையாடப்பட்டு வருகிறது பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு, திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
07:02:2025 இன்று காலை 9:00 மணியளவில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி_மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்காக திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினராகிய நான் சென்ற பொழுது மார்க்கெட் நுழைவாயிலில் ஒருவர் வாகனத்தை நிறுத்தி 5:00 ரூபாய் நுழைவு கட்டணம் என்று கூறினார் உடனே நான் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றேன்.
அதில் திண்டுக்கல் மாநகராட்சி தலை சுமை ,இருசக்கர வாகனம், கனரக வாகனங்களில் வரும் மூட்டைக்கு ஐந்து ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது அந்த ரசீதில் மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் கையெழுத்தும் இல்லை , முறையாக தேதியும் இல்லை, வசூலிப்பவருடைய கையெழுத்தும் இல்லை அந்த ரசீதில் இன்றைய தேதி 7 என்று மட்டும் இருந்தது மற்றொரு ரசீதில் தேதியும் மாதமும் வருடம் இல்லை இதை யார் வசூலிக்க சொன்னார் என்றால் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் தான் வசூல் செய்ய சொன்னார் என்று ஒருவர் கூறினார் மற்றொருவர் ஒப்பந்தக்காரர் சக்திவேல் என்று கூறினார்.
மற்றொருவர் திண்டுக்கல் மாநகராட்சி தற்காலிக பணியாளராக வேலை செய்கிறேன் என்று கூறினார் திண்டுக்கல் மாநகராட்சியின் காந்தி மார்க்கெட்டில் நுழைவு கட்டணம் தலைச்சுமை கட்டணம் ஏலம் மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை காந்தி மார்க்கெட்டில் ஒரு நாள் ஒன்றுக்கு வசூல் ஆகும் தொகை சுமார் 34,000 மேல் அது இல்லாமல் மார்க்கெட்டின் வெளிப்புறம் ரோட்டோரத்தில் போடப்பட்டுள்ள சிறிய கடைகளுக்கு ஒரு கடைக்கு 70 ரூபாய் வசூல் செய்கின்றார்கள் மாநகராட்சியின் கருவூலத்தில் ஒரு ரூபாய் கூட செலுத்துவது கிடையாது.
திண்டுக்கல் மாநகராட்சியில் ஏலம் *விடாத குத்தகை இனங்களை வசூலிக்க வேண்டியவர்கள் திண்டுக்கல் மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் ஆனால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் நுழைவு கட்டணம் வசிப்பவர்கள் தனியார் மூலமாக வசூலித்து மாநகராட்சியில் பெயரளவில் கருவூலத்தில் செலுத்தப்பட்டு வருகிறது இதனால் ஆண்டுக்கு சுமார் நான்கு கோடி ரூபாய்க்கும் மேல் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
நுழைவு கட்டணம் மார்க்கெட்டின் 4 நுழைவாயில்களிலும் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
இது மட்டுமின்றி ஏற்கனவே திண்டுக்கல் மாநகராட்சியின் வருவாய் தரக்கூடிய குத்தகை இனங்கள் 50% க்கு மேல் ஏலம் விடாமல் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது
திண்டுக்கல் மாநகராட்சியில் வசிக்கும் சாமானிய மக்கள் சொத்து வரி 2000 ரூபாய் செலுத்தவில்லை என்றால் கூட குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து வருகின்றனர்
இதுதான் திராவிட மாடலோ? என்ற கேள்வியை பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் மாநகராட்சியின் 14 வது வார்டு மாமன்ற என்ற உறுப்பினர் தனபாலன் மாவட்ட ஆட்சியருக்கும் மாநகராட்சி தலைவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.