
பழனியில் திருமலை நாயக்கரின் செப்பேடு கண்டுபிடிப்பு
திண்டுக்கல் பழனியில் கனகராஜ் என்பவரிடம் இருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த செப்பேடு திருமலைநாயக்கரின் 12-ம் ஆட்சி ஆண்டில் அவருடைய 51 ஆம் வயதில் பழனி வருகையின் போது எழுதப்பட்டுள்ளது என்பதும். செப்பேட்டின் முகப்பில் மயில் மேல் அமர்ந்த நிலையில் முருகனும் இடது ஓரம் அரிய அணையில் அமர்ந்த நிலையில் திருமலைநாயக்கரும் வலது ஓரம் சஞ்சீவி மூலிகை எடுத்து வரும் அனுமனும் கோட்டுருவாங்களாக பொறிக்கப்பட்டுள்ளது.
சின்னோபநாயக்கர், புலிப்பாணி, தவராசபண்டிதர் ஆகியோர் முன்னிலையில் இப்பட்டயத்தை எழுதியதாக செப்பேடு கூறுகிறது மேலும் 138 வரிகளில் செப்பேடு பொறிக்கப்பட்டுள்ளது.