
திண்டுக்கல்லில் யானைத் தந்தம் கடத்திய கும்பல் கைது
தமிழ்நாடு வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு வன அலுவலர் நவீன் குமார் மற்றும் திண்டுக்கல் வன அலுவலர் மதிவாணன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் படி தனிப்படை அமைத்து நத்தம் சாலையில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டிருந்தபோது TN10R3333 ஸ்கார்பியோ வாகனத்தை ஆய்வு செய்தபோது அதில் இருந்து யானைத் தந்தம் கைப்பற்றப்பட்டது.
இதில் பெருமாள் சிறுமலை, ஜெயக்குமார் சிறுமலை, வெங்கடேஷ் சிறுமலை, பிரபு சிலுவத்தூர், ரெங்கராஜ் கோபால்பட்டி,சேகர் நத்தம், ஜோசி ஜான் மேலூர் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சோலைக்காடு பன்றிமலை பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டு விற்பனைக்கு முயன்ற போது திண்டுக்கல் வனச்சரகர் மதிவாணன் மற்றும் நவீன் குமார் ஆகியோர் சேர்ந்த தனிப்படை கைது செய்தனர்.
தலைமை நிருபர் : பாலசிந்தான்.