June 8, 2025
திண்டுக்கல்லில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று துவக்கி வைத்தார்

திண்டுக்கல்லில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று துவக்கி வைத்தார்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த 438 ஊராட்சிகளில் உள்ள இளைஞர்களுக்கு இன்று 31.01.25 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பி எஸ் என் எ பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவில் காணொளி காட்சி மூலமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டார். விழாவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வில்வித்தை வீரர் தமிழ்ச்செல்வி மேடையில் அமர வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் மேலும் அவருக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் திண்டுக்கல் மற்றும் தேனிமாவட்டத்தில் உள்ள 438 ஊராட்சிகளுக்கு கிரிக்கெட் பேட், கால் பந்து, கைப்பந்து, இறகுபந்து, என உபகரணங்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளுக்கு 509 விளையாட்டு கிட்டுகள் வழங்கப்பட்டது ஒவ்வொரு கிட்டிலும் 33 விளையாட்டு பொருட்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.