
பனைமரம்.
ஒரு 5 வருடங்கள் வளர்ந்த பனை மரத்தில் , 1000- 1500 சல்லி வேர்கள் இருக்கும் !!
மழைக்காலங்களில், மழை பெய்யும் பொழுது ,இந்த 1500 சல்லி வேர்களின்* வழியாக மழைநீர் பூமிக்கு அடியில் , ஒரு பெரிய பைப்பில் தண்ணீர் போவது போல் சென்று கொண்டே இருக்கும்!!
ஒரு இடத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் இருந்தால், இந்த சல்லி வேர்களின் வழியாக செல்லும் மழை நீர் ஒரு பெரிய குளம் போல் பூமிக்கு அடியில் தேங்கி நிற்கும். நிலத்தடி நீர்மட்டம் உயர வழி வகுக்கும்!!
ஒரு வளர்ந்த பனைமரம், 15,000-20,000 லிட்டர் தண்ணீரை மழை காலத்தில் பூமிக்கு அடியில் சேர்த்து வைக்கும் திறன் கொண்டது!!
மண்ணும் மரமும் இயக்கம் மூலம் நடும் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பனை மரங்கள் வளரும் பொழுது ,ஒரு பெரிய குளம் போல்/ஏரி போல் பூமிக்கு அடியில் தண்ணீரை சேர்த்து வைக்கும்!!
உங்கள் ஊரில் உள்ள நீர்நிலைப் பகுதிகளில், குளம் குட்டைகளில், வயல்களில், வரப்புகளில், ஆற்றங்கரை ஓரங்களில் நிறைய நிறைய பனை விதைகளை நட்டு, அடுத்த தலைமுறைக்கு நிலத்தடி நீர் பெருக,மண் வளம், மழை வளம் பெருக உதவுங்கள்!!!