
வீட்டு பயன்பாடு சிலின்களில் முறைகேடு.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
கேஸ் ஏஜென்ஸி நிறுவத்தார்கள் சிலிண்டர்கள் வழங்குவதற்கு பயனாளிகளின் கைரேகையை பயன்படுத்தி OTP பெற்று சிலிண்டர் விநியோகம் செய்ய வழிவகை மேற்கொண்டுள்ள நிலையில் , கேஸ் ஏஜென்ஸி அவற்றில் முறைகேடு செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கு வழங்கும் சிலிண்டர்களில் மானியமும் பெற்றுக் கொண்டு, வணிக பயன்பாட்டிற்கு அதிக விலைக்கு வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீட்டு பயன்பாட்டிற்கு வழங்கும் சிலிண்டரின் விலை 844, மானியம் (உஜ்வாலா 353 ) இதர 47 ரூ வழங்கி வரும் நிலையில் ,வணிக பயன்பாட்டு சிலிண்டர் 1 க்கு ரூ 1964/ வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்காமல், வீட்டு உபயோக சிலிண்டரை வழங்கி சிலிண்டர் 1 க்கு 1000 வரை பெற்று கொள்ளை லாபம் பார்த்து வருகின்றர்.
பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்கள், பேக்கரி மற்றும் தேநீர் விடுதிகளில் வட்ட வழங்கல் அலுவலர் முறையாக ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபட்டுவரும் கேஸ் நிறுவனத்தார்களின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.