
மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் 18 வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டப்பட்டது
மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில்
18 வது ஆண்டு சமத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சாதி மதம் மொழி கடந்து பலர் கலந்துக்கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர்.

இவ்விழாவில் மும்பை வடமத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வர்ஷா கைக்கவாட் எம் பி , தாராவி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கைக்கவாட் எம் எல் ஏ, முன்னாள் கவுன்சிலர் வக்கீல் ஷேக், தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜனசங்கம் முன்னாள் தலைவர் கே வி அசோக்குமார், திராவிடர் கழகத்தலைவர் கணேசன், பகுத்தறிவாளர் கழகம் அமைப்பாளர் ரவிச்சந்திரன், மக்கள் தேசம் கட்சி மராட்டிய மாநிலம் பொதுச்செயலாளர் சிகாமணி , Hands to help foundation சைமன் & லெனின், காங்கிரஸ் பிரமுகர் வடிவேல், ஜெய் பீம் பவுண்டஷன் ராஜா குட்டி & நித்தி , மகிழ்ச்சி மகளிர் பேரவை வனிதா & வெனிலா சுமதி & வளர்மதி , கம்பன் உயர்நிலைப்பள்ளி வினோத் ஆசிரியர் , தமிழ் ஓட்டுனர்கள் சங்கம், தலைவர் ரவிரஜினி, மும்பை திருவள்ளுவர் நற்பணி மன்றம் இயக்கம் தலைவர் ராதாகிருஷ்ணன், கே வி என் ஸ்டார் தேவராஜ் , Enlighten Foundation ராஜேஷ் போன்ற பல்வேறு மும்பை அமைப்பை சார்ந்த பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் பொங்கல் சிறப்பு பாடலை பாடகர் ஆனந்தராஜ் பாடி மக்களை ரசிக வைத்தார்.
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தாராவி காவல்த்துறை விழா நடக்க ஒத்துழைப்பு வழங்கினார்
இந்நிகழ்வை மும்பை விழித்தெழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்கள் சிறீதர் தமிழன், பன்னீர் செல்வம், மதன், கதிர், சுரிமகேஷ், அசோக், பாண்டியன், ரவி , போன்ற இயக்க நிர்வாகிகள் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினர்.