
அன்பு இல்லத்தில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
தேசிய கலை மன்றம் தென்தமிழகம் சார்பாக திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அன்பு இல்லத்தில் மாணவர்களுடன் இணைந்து தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேசிய கலை மன்றம் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் திரு .மணிகண்டன் கலந்து கொண்டார்.

மேலும் அவருடன் இணைந்து தேசிய கலை மன்றம் தென்தமிழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் குமாரி.மகாலெட்சுமி.க, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாநில இணைச் செயலாளர் திரு.சூர்யா அவர்களும் மற்றும் பல மாநில பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் பொங்கல் விழா சிறப்பு கொண்டாட்டமாக
விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.