
தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
திண்டுக்கல் வேலு மஹாலில் தமிழர் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் ஆரம்பம் செய்யப்பட்டது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபு அம்பலம் வரவேற்புரை வழங்கினார்.

மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நதியா மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா பிச்சன் மாநில மகளிர் அணி செயலாளர் சித்ரா ஜெய கிருஷ்ணன் மாநில மீனவர் அணி செயலாளர் செல்வம் மாநில இளைஞரணி செயலாளர் செல்லப்பாண்டி மாநில மருத்துவர் அணி செயலாளர் அன்புஎழில் மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம் வாழ்த்துரை வழங்கினார்கள் மாநிலச் செயலாளர் அழகர் மாநில இளைஞரணி அமைப்பாளர் குணசேகரன் மாநில பொதுச்செயலாளர் தளவாய் ராஜேஷ் மாவட்ட அமைப்புச் செயலாளர் மகிடேஸ்வரன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் நிறைவு பேருரையில் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார்உரையில் 15 அம்ச மாநில செயற்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வகுப்பு வாரி தொகுப்பு சம இடப்பங்கீட்டுடன் முத்தரையர்களுக்கு 10 விழுக்காடு இடப்பங்கிட்டைஉறுதிப்படுத்தவும் மற்றும்காவிரி, குண்டாறு, வைகை இணைப்பு திட்டத்தை நிறைவு படுத்தவும் மற்றும் பஞ்சாலை தொழிலாளர் நல வாரியம் அமைத்திடவும் திருச்சிராப்பள்ளியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் அரசாணையின்படி நூலகம் அமைத்திடவும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறுவப்பட்டன இறுதியாக தமிழர் பாரம்பரிய விளையாட்டு பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜெய் நன்றி உரையாற்றினார்