
குமரி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு-உரியவரிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து, பொதுமக்களால் தவறவிடப்பட்ட,காணாமல் போன,திருடப்பட்ட பல்வேறு வகையான கைபேசிகள் மாவட்ட சைபர் கிரைம் போலீசால் கண்டுபிடிக்கப்பட்டு இன்று (11.1.2025) அந்தசெல்போன்களை உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி R.ஸ்டாலின் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் 305 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.