
தொழில் துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில் துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில். இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றார்கள். முதல் கட்டமாக நடைபெற்ற பயிற்சி முகாமில் 150 மாணவர்கள் கலந்து கொண்டு இப்பயிற்சியினை பெற்றனர்.
09.01.25 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில்கல்லூரியின் முதல்வர் திரு.ஏ. சேக் தாவூத் அவர்கள். தலைமை தாங்கி பேசுகையில், சவால்கள் நிறைந்த இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவதற்கான ஆலோசனைகளை மற்றும் வழிகாட்டும் பயிற்சியின் மூலம் மாணவர்கள் தங்களின் தனி திறமைகளை வளர்த்துக் கொள்ளுவார்கள் என்றும் இந்த பயிற்சிக்கு பிறகு புதிதாக தொழில் துவங்கும் இளம் தலைமுறை எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறினார்கள்.
முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் திரு.கணேஷ் குமார் அவர்கள் பயிற்சி முகாமிற்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று வாழ்த்தி முகாம் அறிக்கையினை சமர்ப்பித்தார்கள். இவ்விழாவில், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) உறுப்பினர் செயலர் பேராசிரியர். முனைவர் S.வின்சென்ட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்களது திறன்களை மேம்படுத்தும் படிப்பின் முக்கியத்துவத்தையும், மாணவர்களது ஆர்வம் மற்றும் ஆற்றல் இரண்டையும் பக்குவ நிலைக்கு எடுத்துச் சென்று கற்ற கல்வியை, தொழில்நுட்பத் திறனை மக்கள் நலனுக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த ஆரம்பித்தால் வெற்றி உறுதி என்றும், திறமையை வைத்துக்கொண்டு வறுமையில் வாழக் கூடாது என்றும்,
இந்த பிற்படுத்தப்பட்ட பகுதி வறட்சியான நிலையில் இருந்து வளர்ச்சி பெற்றதற்கு காரணமான கல்வி அறிவு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது என்றும், இந்தப் பிற்பட்ட பகுதியில் இதுபோன்ற திறன் தொடர்பான பயிற்சிகளை பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ந்து வழங்குவதற்கு தங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் பேசி மாணவர்களை வாழ்த்தி பயிற்சி பெற்ற 150 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள். நிறைவாக, மின்னியல் துறை தலைவர் திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றி கூறினார்.