
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வணக்கத்திற்குரிய ரெ.மகேஷ் தலைமையிலும், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையிலும் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது.மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் வாங்கப்பட்டது, துறைச்சார் அதிகாரிகளிடம் கடந்த காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியம் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கால தாமதமின்றி மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.