June 7, 2025
தாராபுரம் விவேகம் மேல்நிலைப் பள்ளியில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.

தாராபுரம் விவேகம் மேல்நிலைப் பள்ளியில் 2025-2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விவேகம் மேல்நிலை பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

இதில் பள்ளியின் பேண்ட் வாத்தியகுழு என்சிசி தரைப்படை விமானப்படை கப்பற்படை சாரணர் படை சாலை பாதுகாப்பு மாணவர்கள் படை செஞ்சிலுவை சங்கம் தேசிய பசுமை படை சாம்பியன்ஸ் ஐகான்ஸ் பெஜனிட்ஸ் மற்றும் வாரியர்ஸ் மாணவ அணியினர் நடத்தினர் இவ் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன இதில் 100 மீட்டர் 800 மீட்டர் 4×100 மீட்டர் தொடர் ஓட்டபோட்டிகள் நடத்தப்பட்டன போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சுரேஷ்குமார் டிஎஸ்பி பரிசளித்து வெகுவாக பாராட்டினார். இசைக்குழு மாணவர்களின் இசை நிகழ்ச்சி பிரைமரி குழந்தைகளின் காவடியாட்டம், கும்மியாட்டம், பட்டாம்பூச்சி நடனம், கிளாப் நடனம், படுகா நடனம், புலியாட்டம், மிலிட்டரி நடனம், பந்து நடனம், கிளைம் நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியம் செயலாளர் பூபதி அறக்கட்டளை உறுப்பினர்கள் கனகராஜ் நடராஜன் விஜயகுமார் முதல்வர் அல்லிராணி உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.