August 7, 2025
மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் உதவி ஆய்வாளரை நேரில் பாராட்டிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் உதவி ஆய்வாளரை நேரில் பாராட்டிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தமிழ்நாடு முதுநிலை தடகள சங்கமும்,மதுரை மாவட்ட முதுநிலை தடகள சங்கமும் இணைந்து நடத்திய 45 வது மாநில அளவிலான தடகள போட்டியானது கடந்த 03.01.2025 ம் தேதி முதல் 05.01.2025 வரை மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் திருமதி.கீதா அவர்கள் 100 மீட்டர், 400 மீட்டர் தடை தாண்டும் போட்டி மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றார்.

இன்று 06.01.2025 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் இ.கா.ப அவர்கள் வெற்றி பெற்ற பெண் உதவி ஆய்வாளரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *