
புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத் திட்டத்தை மாண்புமிகு பால்வளம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்கள் துவங்கி வைத்து மாணவிகளுக்கு பற்று அட்டையினை வழங்கினார் உடன் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் கலோன் ,ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, நகர் மன்ற துணைத் தலைவரும்,தலைமை பொதுக்குழு உறுப்பினருமான வி எஸ் ஹமீது சுல்தான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.