
பழங்குடியின பெண் விவசாயிகளை தொழில்முனைவராக்க புளி மதிப்பு கூட்டல் பயிற்சி
இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கோவை வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் , தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை இணைந்து நடத்திய புளி மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை விவேகானந்தா அறக்கட்டளை திருவண்ணாமலை மூலம் செயல்படுத்தப்படும் தொல்குடியினர் வேளாண் மேலாண்மை திட்டம் ஐந்திணை ஜவ்வாது மலைவாழ் பழங்குடியினர் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக புளி மதிப்பு கூட்டல் திட்டப் பயனாளிகள் கலந்து கொண்டனர் பயிற்சி முகாமுக்கு வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவன இயக்குனர் முனைவர்.குன்னி கண்ணன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முனைவர் நாகராஜன் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தொடக்குறையாற்றினார் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைத்து பழங்குடியின பயனாளிகளுக்கும் புளி மதிப்பு கூட்டல் முறை புளி மிட்டாய் , ஜாம், ஜூஸ், புளி சாதம் தயாரிப்பிற்கான பவுடர் ஆகியவை குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவன விஞ்ஞானி மாயவேல் ஏற்பாடு செய்திருந்தார் இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் முனைவர் பாலு , விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.