
வெளிநாட்டில் இறந்தவரின் உடல் குடும்பத்திற்கு கிடைக்க உதவிய சமூக ஆர்வலர்கள்
இராமநாதபுரம். துபாயில் திருச்சியை சேர்ந்த அன்புராஜ் (38) தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி பின்னரும் அங்கேயே சுற்றி திரிந்து அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்துள்ளார். இதையறிந்த துபாய் காவல்துறை இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தூதரக அதிகாரிகள் (HOPE )சமூக சேவை துபாய் அமைப்பு மற்றும் கீழக்கரை கம்யூனிட்டி சென்டர் (KCC) குழு ஆகிய சமூக சேவை தோளர்களான இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ராசிக், ஹசன் பாசித், பாசித் இலியாஸ் VCK, ஜெய்னுல் ஆப்தீன், அப்துர் ரஹ்மான், ஹசன் பாய்ஸ், SKV சேக், மற்றும் சதாம் ஆகியோரின் உதவியை நாடினர். சமூக வலைதளம் வாயிலாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பம் பொருளாதார நழிவில் இருப்பதை அறிந்த தோழர்கள் இறுதி ஏற்பாட்டு செலவுகளை தாங்களே செய்து பின்னர் உடலை தாயகம் அனுப்பும் செலவுகளை இறந்தவர் வேலை பார்த்த நிறுவனத்தை ஏற்க்க செய்து ஒருவாரமாக துபாய் நாட்டின் அரசு விதிமுறைகளின்படி சொந்த ஊருக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்,திருச்சியில் ஆம்புலன்ஸ் ஏற்பாட்டை திருச்சி காதர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.துபாய் HOPE மற்றும் கீழக்கரை KCC தோழர்களுக்கு துபாய் தூதரக அதிகாரிகளும்,துபாய் வாழ் தமிழர்களும் இறந்தவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
நிருபர். K. பாக்கியராஜ் இராமநாதபுரம்