
சிவகங்கை ஆரிய பவன் நகர் அருள்மிகு ஸ்ரீ வெள்ளை விநாயகர் திருக்கோவிலில், 12ஆவது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்விழா, வரும் 27.08.2025 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது. சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை மற்றும் சிறப்பான தீபாராதனை நடைபெறும்.
திருக்கோவிலின் விநாயகர் சதுர்த்தி விழா , ஆவணி மாதம் 11ம் தேதியன்று ஆன்மீக உற்சாகத்துடன் நடைபெற உள்ளது.
அனைத்து பக்தர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, அருள்மிகு ஸ்ரீ வெள்ளை விநாயகர் அருளைப் பெற்றுச் செல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
விழாவையொட்டி அன்னதானம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து பக்தகோடி பெருமக்களும் கலந்து கொண்டு வருக ஸ்ரீ வெள்ளை விநாயகர் அருள் பெறுக






