
குடியரசு துணைத் தலைவராக என்.டி.ஏ கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார்., - அண்ணா, எம்.ஜீ.ஆர்., அம்மா, காமராஜரை தவிர்த்துவிட்டு எந்த அரசியல் கட்சியும் இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் அரசியல் செய்ய முடியாது - உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி:
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அமமுக உசிலம்பட்டி தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன். குடியரசு துணைத் தலைவராக என்.டி.ஏ. கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார்., எங்களுக்கு 1999 பாராளுமன்றத்தில் இருந்து நல்ல நண்பர், இனிமையானவர், எல்லாரிடமும் எளிமையாக பழக கூடியவர்.
இப்போது, கவர்னராக பொறுப்பேற்ற பின்னும் எம்.பி. ஆக இருந்த போது எப்படி பழகினாரோ அதே போன்று பழக கூடியவர், அவர் இந்தியாவின் குடியரசு துணை தலைவராவதும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் பெருமை சேர்க்க கூடிய விஷயம் தான் எனவும்.
விஜய் எந்த எந்த கட்சியை பற்றி பேசினாரோ, அந்த அந்த கட்சியினர் பதில் அளிப்பார்கள்.
மாநாட்டில் அண்ணா, எம்.ஜீ.ஆர்., படங்களை பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு,
அண்ணா, எம்.ஜீ.ஆர்., அம்மா, காமராஜர் போன்ற தலைவர்களை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில்
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அரசியல் செய்ய முடியாது எனவும்.
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் 108 வாகனம் தாக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் பாத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அவர்கள் நிச்சயமாக பதில் அளிப்பார்கள். வரும் டிசம்பருக்குள் தமிழகத்தில் எத்தனை அணிகள் ஒன்று சேர போகிறது, என்ன என்ன கூட்டணி அமைய போகிறது என, அனைவருக்கும் தெரிய வரும். அமமுகவின் கீழ் அம்மாவின் தொண்டர்கள் பல்வேறு சோதனைகளையும், பிரச்சனைகளையும் தாண்டி அமமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது., 2026 தேர்தலில் அமமுக சரியான முத்திரை பெறும். அடுத்தடுத்து, தேர்தலுக்கான சுற்றுப் பயணங்கள் விரைவில் நடைபெறும் என, பேட்டியளித்தார்.






