
உப்பூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
இராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்களம் அருகே உப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்தா மெட்ரிக்குலேசன் பள்ளியின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை அப்பள்ளியின் நிறுவனர் திருமதி. அன்புமலர் பாண்டியன் அவர்கள் துவக்கிவைத்தார். இந்த பேரணியில் அப்பள்ளியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என முழக்கமிட்டு வலம் வந்தனர்.






