
காரியாபட்டியில் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நீதிபதி ஆய்வு :
காரியாபட்டி ஆக – 10
விருதுநகர், காரியாபட்டி யில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு பணிகளை நீதிபதி ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி யில் இயங்கி வரும், மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டு வதற்கு இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
காரியாபட்டி நீதித்துறை நீதிபதி யோகேஸ் வரன் இடம் தேர்வு செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, பேரூராட்சித் தலைவர் செந்தில், வழக்கறிஞர் கள் ஜெயப் பிரகாஷ, அக்கினி தேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.






